Posts

Showing posts from January, 2022

டாக்டர் ஜாகீர் ஹுசைன்

Image
டாக்டர் ஜாகீர் ஹுசைன்   (13 மே 1967 - 3 மே 1969) புகழ் பெற்ற மனிதர்கள், இந்தியா   குடியரசுத் தலைவர்..! ஹைதராபாத்தில் 1897-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி பிறந்த டாக்டர் ஜாகீர் ஹுசைன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள எட்டாவாவில் தமது பள்ளிக் கல்வியை முடித்தபின் அலிகரில் கல்லூரி கல்வி பயின்று முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயின்ற அவர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்று தாயகம் திரும்பினார். புது தில்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய அவர் மிகச் சிறந்த கல்வியாளராக உருவெடுத்தார். 1938-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட தேசிய அடிப்படை கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்திய பெருமை டாக்டர் ஜாகீர் ஹுசைனையே சேரும். 1948-ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்ற அவர் உலக பல்கலைக் கழக சேவை அமைப்பின் அகில உலக தலைவராகவும் செயலாற்றினார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்ட அவர் யுனஸ்கோவின் நிர்வாகக் குழுவில் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார். மத்திய உயர் நிலை கல்வி வாரியத்தின் த...

டாக்டர் ராஜேந்திர பிரசாத்..!

Image
டாக்டர் ராஜேந்திர பிரசாத்..! ( 26 ஜனவரி 1950 - 13 மே 1962 ) புகழ் பெற்ற மனிதர்கள், முதல் குடியரசுத் தலைவர்..! வடக்கு பீகாரில் ஓர் குக்கிரா மத்தில் 1884-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பிறந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தியக் கொள்கைகளின் முழுவடிவமாகத் திகழ்ந்தவர். பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரைப் பற்றி கூறுகையில் பாரதத்தின் அடையாளம் என்றே வர்ணித்தார். தமது பள்ளிக் கல்வியை பீகாரில் நிறைவு செய்த டாக்டர் பிரசாத் கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பில் முதலிடமும் முதுகலை சட்டப்படிப்பில் முதலிடமும் பெற்றார். 1911-ல் தமது வழக்கறிஞர் பணியை கொல்கத்தாவில் துவக்கிய அவர் அகில இந்திய காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். 1916-ல் பாட்னாவிற்கு இடம்பெயர்ந்த டாக்டர் பிரசாத் அங்கு அமைக்கப்பட்ட பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1915-ல் கொல்கத்தாவில் முதன்முதலாக காந்தியடிகளை சந்தித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1920-ல் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். மும்பையில் நடைபெற்ற இந்திய தே...

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

Image
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்   ( 13 மே 1962 - 13 மே 1967 ) புகழ் பெற்ற மனிதர்கள், இந்தியா   குடியரசுத் தலைவர்..! இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பெருமை சேர்த்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருத்தணியில் பிறந்தார்.  மிகச் சிறந்த மாணவராக திகழ்ந்த அவர் இந்திய தத்துவஇயலின் அனைத்துத் துறைகளையும் கற்றறிந்து உலக புகழ்பெற்ற தத்துவஇயல் அறிஞராகப் பரிமளித்தார். திருப்பதியில் பள்ளிக் கல்வியையும், வேலூரிலும் பின்னர் சென்னை கிறிஸ்துவ கல்லூரியிலும் பயின்ற அவர் தத்துவஇயலில் பட்டம் பெற்றார். சென்னையிலும் மைசூர், கல்கத்தா, ஆந்திரா ஆகிய பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியராக பணியாற்றிய அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முதலாவது இந்திய பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றிய ராதாகிருஷ்ணன் ஐக்கிய நாடுகள் அவையின் யுனஸ்கோ அமைப்பில் இந்திய குழுவிற்கு தலைவராக பலமுறை பொறுப்பேற்று சென்றவர் ஆவார். உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் அவரது புலமையைப் போற்றி டாக்டர் பட்டம் வ...

தமிழ் வளர்த்த அமுதகவி உமறுப்புலவர்...!

Image
தமிழ் வளர்த்த அமுதகவி உமறுப்புலவர்...! உமறுப்புலவரின்  சீறாப்புராணம் ..!!   புகழ் பெற்ற மனிதர்கள், சீறாப்புராணம் : ★ அமுதகவி உமறுப்புலவர் இஸ்லாமிய சமுதாயத்தில் 16-ம் நூற்றாண்டில் பிறந்து, தமிழுக்கு தொண்டாற்றி சீறாப்புராணம் இயற்றியவர்.  ★ மொழியை வளர்ப்பதில் சாதிமதம் தேவையில்லை என உலகிற்கு உணர்த்தியவர் அமுதகவி உமறுப்புலவர் ஆவார்.   ★ 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து, தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரத்தில் வாழ்ந்தார்.  ★ அரபு தேசத்தின் வாசனைத் திரவிய வியாபாரியான இவர், அருகே இருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை விற்று வந்தார்.  ★ உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.  ★ எனவே, சேகு முதலியாரும் மன்னாரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு, நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார். ★ 1642 ஆம் ஆண்டு செய்கு முஹம்மது அலியாருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்...

நான்காம் நக்கீரர் எனும் குலாம் காதிறு நாவலர்

Image
நான்காம் நக்கீரர் எனும் குலாம் காதிறு நாவலர். புகழ் பெற்ற மனிதர்கள், குலாம் காதிறு நாவலர். ★ தமிழிலக்கிய வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்கு அளப்பரியது.  ★உமறுப்புலவர், சேகனாப் புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், காசிம் புலவர், ஜவ்வாதுப் புலவர், சர்க்கரைப் புலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு, செய்குதம்பிப் பாவலர் எனப் பலரை உதாரணமாகச் சொல்லலாம்.  ★ இந்த வரிசையில் வைத்து மதிப்பிடத் தக்கவர் குலாம் காதிறு நாவலர்.  ★ புலவர் கோட்டை எனப் பெயர் பெற்ற நாகூர் நன்னகரில் கி.பி.1833 ஆம் ஆண்டு குலாம் காதிறு பிறந்தார்.  ★ இவரது தந்தையார் பெயர் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தர்.  ★ இவரது முன்னோர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நாகூர் வந்து குடியமர்ந்தனர். ★ தந்தைவழி தனயனுக்கும் தமிழறிவு வாய்த்தது. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மார்க்கக் கல்வியும் தமிழும் பயின்றார். ★ முகைதீன் பக்கீர் சாகிபிடம் அரபியைக் கற்றுத் தேர்ந்தார். பத்துவயதுக்குள் திருக்குர்ஆனை முழுமையாகக் கற்றறிந்தவரனார்.  ★ குலாம் காதிர் இறைவேதம் குர்ஆனையும் அரபுத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய நூல்களையும் ஓதி முடித்தார்....