Posts

மாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்..!

Image
மாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்..! எகிப்திய அரசர் குஃபூ (KhufU) சீயோப்ஸ் (கி.மு. 26 ஆம் நூற்றாண்டு) புகழ் பெற்ற மனிதர்கள், எகிப்தில் கீஸா  பிரமிடைக் கட்டியவர்  குஃபூ (எ)  சீயோப்ஸ்..! கீஸா என்னுமிடத்திலுள்ள மாபெரும் பிரமிடைக் கட்டியதற்காக அழியாப் புகழ்பெற்ற எகிப்திய அரசர் குஃபூ (KhufU) (இவருடைய பெயரின் கிரேக்க வடிவம் தான் சீயோப்ஸ் ஆகும்) இவர் தமக்குக் கல்லறையாக இந்தப் பிரமிடைக் கட்டினார் என்பர். பிறந்த, இறந்த தேதிகள் சரியாகத் தெரியவில்லை. எனினும், இவர் கி.மு. 26 ஆம் ஆண்டு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் மெம்பிஸ் நகரைத் தமது தலைநகராகக் கொண்டிருந்தார் என்றும், இவர் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்தார் என்றும் அறிகின்றோம். இதைத் தவிர, இவரது வாழ்க்கை குறித்து வேறு தகவல்கள் தெரியவில்லை. இந்த மாபெரும் பிரமிடு மிகப் புகழ் பெற்றது, மனித முயற்சியால் எழுப்பப்பட்ட மிகப் பிரம்மாண்டமான ஒரு கட்டுமானம் என்று மட்டுமே சொல்ல முடியும். பண்டைய நாட்களில் கூட இது, உலகின் ஏழு அதிசயங்களும் ஒன்றாகக் கருதப்பட்டது. மற்ற ஆறு அதிசயங்களுள் காலத்தால் அழிந்துவிட்ட போதிலும் மாபெரும் இந்த பிரமிடு காலத...

முதலாவது எகிப்திய பேரரசின் அரசர் மெனஸ் | King Menas of the First Egyptian Empire ...!

Image
முதலாவது எகிப்திய பேரரசின் அரசர்  மெனஸ்...! King Menas of the First Egyptian Empire ...! மெனஸ்  (Menace ) மெனஸ் (கி.மு. 3100) புகழ் பெற்ற மனிதர்கள், மெனஸ் (Menace ) முதலாவது எகிப்திய அரச மரபின் ஆதி அரசராகிய மெனஸ் (மெனஸ்), எகிப்து நாட்டை முதலில் ஒருங்கிணைத்ததன் மூலம், மனித நாகரிகத்தில் ஒரு நீண்ட காலத்திற்குச் கீர்த்திமிகு பங்கினை ஆற்றிய முடியரசை நிறுவினார். மெனஸ் பிறந்த, இறந்த தேதிகள் தெரியவில்லை. எனினும் இவர் கி.மு. 3100 ஆம் ஆண்டில் பிறந்தவரெனப் பொதுவாக நம்பப்படுகிறது. அதற்கு முந்தைய காலத்தில் எகிப்து ஒருங்கிணைந்த ஒரு நாடாக இருக்கவில்லை. மாறாக, இரு சுதந்திரமான முடியரசுகளைக் கொண்டிருந்தது. ஒன்று வடக்கில் நைல் ஆற்றின் கழிமுகப் பகுதியிலும், மற்றொன்று தெற்கில் நைல் ஆற்றின் கழிமுகப் பகுதியிலும், மற்றொன்று தெற்கில் நைல் பள்ளத்தாக்கின் நெடுகிலும் அமைந்திருந்தன. (நைல் ஆறு கடலை நோக்கிக் கீழாகப் பாய்வதால் பண்டைய எகிப்திய நாட்டுப் படங்களில், நைல் ஆற்றின் முகவாய்கள், பக்கத்தின் அடியின் காணப்பட்டன. அந்தக் காரணத்தினால், வடக்கிலிருந்து கழிமுகப் பகுதியை கீழ் எகிப்து என்றும், தெற்கு முடியரசை ...

விஸ்வேஸ்வரய்யா

Image
விஸ்வேஸ்வரய்யா..! பிரிட்டிஷ் அரசை பிரமிக்க வைத்த இந்தியப் பொறியியல் மேதை..! மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, புகழ் பெற்ற மனிதர்கள், பிரிட்டிஷ் அரசை பிரமிக்க வைத்த இந்தியப் பொறியியல் மேதை..! விஸ்வேஸ்வரய்யா..! ★ இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் போற்றிக் கொண்டாடிய இந்தியப் பொறியியல் மேதையின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.  ★ இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் போற்றிக் கொண்டாடிய இந்தியப் பொறியியல் மேதையின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம். ★சிக்கபல்லபுரா மாவட்டத்தில் மைசூருக்கு உட்பட்ட முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்த மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்பவரின் பிறந்தநாளையே இந்திய பொறியாளர் கர்நாடகமாகக் கொண்டாடி வருகிறோம். ★ 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிதான் அவர் பிறந்தார்.   சிறந்த பொறியாளராக விளங்கிய இவர் பொறியில் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்து, மும்பை (அப்போது பாம்பே) பொதுப்பணித்துறையிலும் பின், இந்திய பாசனத் துறையிலும் பணியாற்றினார். ★ முதலில் தானியங்கி மதகு ஒன்றை வடிவமைத்து காப்புரிமை பெற்றவர் விஸ்வரைய்யாதான்.  ★ இந்தத் தானியங்கி மதகு முதல் முறையாக 1903ஆம் ஆண்...

செம்ஸ்போர்டு பிரபு

Image
செம்ஸ்போர்டு பிரபு..! மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம்.. ! bz famousmen, புகழ் பெற்ற மனிதர்கள், செம்ஸ்போர்டு பிரபு..! ◆ செம்ஸ்போர்டு பிரபு (12 ஆகஸ்டு 1868 – 1 ஏப்ரல் 1933) பிரித்தானியப் பேரரசின் அரசியல்வாதியும், பிரித்தானிய காலனி ஆதிக்க நாடுகளின் ஆளுநரும் ஆவார். பெயர்:  செம்ஸ்போர்டு பதவி:  பதவி : வைஸ்ராய் மற்றும் இந்தியத் தலைமை ஆளுநர் காலம் :  4 ஏப்ரல் 1916 – 2 ஏப்ரல் 1921 முன்னவர்:  அரசர்  மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முன்னவர் : வாரன் ஹேஸ்டிங்ஸ் பின்வந்தவர்: ஐசக் 22வது (ஆளுநர், நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா) பதவியில்: 28 மே 1909 – 11 மார்ச் 1913 அரசர்  மன்னர் ஏழாம் எட்வர்டு மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் (லெப்டினன்ட் ஆளுநர், நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா|லெப்டினன்ட்) சர் பிரடெரிக் டார்லி சர் வில்லியம் கூல்லன் முன்னவர்: சர் ஹாரி ராவ்சன் பின்வந்தவர் : ஜெரால்டு ஸ்டிரிக்லாண்ட் அட்மிரால்டியின் முதல் இறைவன் பதவியில் பதவியில்: 28 சனவரி1924 – 7 நவம்பர் 1924 பிரதமர்  இராம்சே மெக்டொனால்டு முன்னவர்: லியோ அமெரிக்கா பின்வந்தவர் : வில்லியம் பிரிட்ஜ்மேன் தனிநபர் தகவல் : பிறப்பு: ...

ரசிகமணி டி.கே.சி...

Image
தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை இடம் பெற பரிந்துரைத்தவர்...!! The person who suggested to place the Srivilliputhur tower under the seal of the Government of Tamil Nadu   ரசிகமணி டி.கே.சி... bz famousmen., புகழ் பெற்ற மனிதர்கள், தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர்...! தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தில் இடம்பெற்ற பரிந்துரைத்தவர் ரசிகமணி டி.கே.சி... ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைத்து திட்டமிட்டனர். பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். “இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறதா? நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் உள்ளது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்துவிடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் ரசிகமணி. டி.கே.சி. அவர்களின் இந்த அ...