தாமஸ் ஆல்வா எடிசன் ◆ உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவை சேர்ந்தவர். ◆ இவர் ஸ்கார்லெட் காய்ச்சல் காரணமாக தாமதமாக தனது 8 வயதில் பள்ளியில் பயில அனுப்பப்பட்டார். ◆ அங்கு மூன்று மாதங்களில் பள்ளி ஆசிரியரால் இனி பள்ளிகூடம் வர வேண்டாம் என நிராகரிக்கப்பட்டவர். ◆ தனது அன்னையின் வழிகாட்டலின் படி சுயமே படித்து மக்கள் மனம் மகிழ 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் செய்த அறிவியல் கண்டுபிடிப்பாளர். ◆ எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது.. ◆ இவரது பல தரப்பட்ட உற்பத்தி தொழில் முயற்சிகளால் படித்தவர்கள் அதிகமானோர் அவரிடம் வேலை வாய்ப்பு பெற்றனர். ◆ நாமும் அவர் போல் வெற்றி பெற அவர் நமக்கு விட்டு சென்ற வெற்றிச் சூத்திரம் இதுதான், 1% உள்ளுணர்வு + 99% உழைப்பு = 100% வெற்றி. ஆரம்ப கால வாழ்க்கை ◆ தாமஸ் ஆல்வா எடிசன் (கி.பி.1847 - கி.பி.1931) அவர்கள் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி 1847 ஆம் ஆண்டில் ஓஹியோவின...
Posts
கௌதம புத்தர் | Gautama Buddha
- Get link
- X
- Other Apps

கௌதம புத்தர் Gautama Buddha bz famousmen, புத்தர் : கௌதமபுத்தர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். மனிதனின் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் கண்டுபிடித்த ஞானி இவர். புத்தர் பி றப்பு : சித்தார்த்தன் கிமு 563 அல்லது 480 இடம் : லும்பினி, நேபாளம் இறப்பு : கிமு 483 அல்லது 400 (வயது 80) இடம் : குசிநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா அறியப்படுவது பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார் பெற்றோர் : சுத்தோதனர் – மாயா வாழ்க்கைத் துணை : யசோதரை பிள்ளைகள் : ராகுலன் ◆ கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் - மாயா தேவிக்கும் இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். ◆ கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அர...
மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான் | Marudanayakam Pillai (of) Muhammad Yusuf Khan
- Get link
- X
- Other Apps

மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான்..! Marudanayakam Pillai (of) Muhammad Yusuf Khan..! (மதுரை நாயகம்) முதுகுளத்தூர் மண்ணின் மைந்தன் மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான், (பிறப்பு கி.பி 1725- இறப்பு கிபி 1764) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாக பணிபுரிந்தார். அவர் பிரிட்டிஷ் இந்தியாவில் முதுகுளத்தூர் தாலுகா மேலபனையூர் என்ற கிராமத்தில் வீர சைவ வெள்ளாளர் குலத்தில் சாதரண விவசாய குடும்பத்தில் கி.பி 1725 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் இஸ்லாமியராக மாறி முஹம்மது யூசுப் கான் என்ற பெயரில் முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். மதுரையின் ஆட்சியாளராக பணி செய்த வேளை அவர் கான் சாகிப் என பிரபலமாக அறிய படுகிறார். ஆற்காட்டு படை தளபதியாகவும், பின்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாகவும் பணி செய்தார். பிரிட்டிஷ் மற்றும் ஆற்காட்டு கூட்டு படையின் பணியாளராக தென் இந்தியா முழுவதும் படையெடுத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர்களை அடக்கி வெற்றி மேல் வெற்றி ஈட்டிக்கொடுத்தார். அதற்கு கான் சாகிப் பட்டமளித்தனர். அந்த சமயத்தில் மதுரை நாயக்கர்கள...
யார் இந்த இரட்டைமலை சீனிவாசன்?
- Get link
- X
- Other Apps

யார் இந்த இரட்டைமலை சீனிவாசன்? ” சென்னை மைலாப்பூர் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் “பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது”- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்றவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண்டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுனரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்! “ தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோரின் முதல் பட்டதாரி தாத்தா இரட்டைமலை சீனிவாசன்! -வாழ்க்கைக் குறிப்பு! இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ் நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் க...
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு | Biography of the great leader Kamaraj
- Get link
- X
- Other Apps

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு...! Biography of the great leader Kamaraj in tamil.! புகழ் பெற்ற மனிதர்கள், பெருந்தலைவர் காமராஜர்: பெயர் : கு. காமராஜர் இயற்பெயர் : காமாட்சி பிறப்பு : 15-07-1903 இறப்பு : 02-10-1975 பெற்றோர் : குமாரசாமி, சிவகாமிஅம்மையார் இடம் : விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா வகித்த பதவி : தமிழக முதல்வர் விருதுகள் : பாரத ரத்னா விருது வாழ்க்கை வரலாறு ★ தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர். ★ ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் ‘பொற்காலமாக’ கருதப்படுகிறது. ★ பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். ★ தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப் படுகிறார். ★ சமுதாயத்தில், தாழ்த்தப்பட்ட...
பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ் சங்கம் நிறுவனர் Tamil scholar Pandithurai Thevar Founder of the Fourth Tamil Sangam
- Get link
- X
- Other Apps

தமிழ் அறிஞர் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ் சங்கம் நிறுவனர் Tamil scholar Pandithurai Thevar Founder of the Fourth Tamil Sangam பாலவனத்தம் ஜமீன்தார் ★ பாண்டித்துரைத் தேவர் (மார்ச் 21, 1867 – டிசம்பர் 2, 1911) மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். ★ இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். ★ இவர் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர். பொன். பாண்டித்துரைத் தேவர் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் பிறப்பு : மார்ச்சு 21, 1867 இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா இறப்பு : திசம்பர் 2, 1911 (அகவை 44) இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா இருப்பிடம் : இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா தேசியம் : இந்தியத் தமிழர் கல்வி :தமிழ்ப் பண்டிதர் பணி : பாலவனத்தம் சமீன்தார் அறியப்படுவது : நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியமை பட்டம் : வள்ளல் சமயம் : சைவம் ★ பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமீந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் பு...
- Get link
- X
- Other Apps

ஜவகர்லால் நேரு ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27, 1964), அவர்கள், இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்) ஆவார்கள். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் (பிரதமர்) பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார். வாழ்க்கையின் இளமை பருவம் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மைய...